ADDED : டிச 22, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை விற்பனை குழுவின் கீழ் செயல்படும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய அரசின் இ-- நாம் முறையில் மறைமுக ஏலத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய்கள் விற்கப்பட்டன.
பெரிய காய்கள் ரூ.16.50க்கும், சிறிய காய்கள் ரூ.9க்கும் தோப்பிலேயே விலை கோரப்பட்டு ரூ. ஒரு லட்சத்து 28ஆயிரத்து 850க்கு விற்கப்பட்டு விவசாயி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இ--நாம் மறைமுக ஏலத்தில் விற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என மதுரை விற்பனைக் குழு செயலாளர் அம்சவேணி தெரிவித்தார்.
விளைபொருள் விற்பனைக்கு 95667 01374ல் தொடர்பு கொள்ளவும்.