ADDED : அக் 15, 2024 05:27 AM
அ நிறம் | அளவு
எழுமலை: எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் மாணவர்கள் பங்கு தலைப்பில் கருத்தரங்கம் தலைமை ஆசிரியர் தனபால் தலைமையில் நடந்தது.
உதவி தலைமை ஆசிரியை குணசுந்தரி வரவேற்றார். சேடபட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெயச்சந்திரன், எழுமலை பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பக்ருதீன், பொருளாளர் கோபி, சிறப்பு விருந்தினராக காந்திகிராம பல்கலை பேராசிரியர் நேரு பங்கேற்றனர்.
