நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணாநகர் உழவர் சந்தை விவசாயிகளுக்கு நிதி மேலாண்மை கருத்தரங்கு நடத்தப்பட்டது. சங்கத் தலைவர் ஹரிஹரன் வரவேற்றார்.
திட்டத்தலைவர் தவசுமுத்து முன்னிலை வகித்தார். ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி தலைமை வகித்தார். ஆராய்ச்சியாளர் சுரேஷ்பாண்டியன் நிதி மேலாண்மை குறித்து விளக்கினார். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

