நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் மாணவிகளுக்கு கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார்.
நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கார்த்திகா தேவி வரவேற்றார். மதுரை கல்லூரி இணை பெற ஆசிரியர் வெங்கடேஷ் பேசினார். பேராசிரியர் ஷெர்லி ரொவீனா நன்றி கூறினர்.