நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தியாகராஜர் கல்வியியல் கல்லுாரி சார்பில் 'எழுதுவது எப்படி' குறித்து கருத்தரங்கு முதல்வர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. எழுத்தாளர் திருமலை, வாசிப்பின் பயன், கட்டுரை, சிறுகதை எழுதுதல், புத்தக விமர்சனம் செய்தல் குறித்து பேசினார்.
தமிழ் சமூகத்தில் எழுத்தின் தாக்கங்களை எடுத்துக்கூறி ஆசிரியர்கள் மாணவர்களை எழுதுவதற்கு ஊக்கப்படுத்தினார். நுாலகர் சுந்தர், வாசகர் வட்டம் மாணவர்கள் சரோஜினி, தர்ஷிணி ஏற்பாடுகளை செய்தனர்.

