நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சங்கீத் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம் தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது.
செயலாளர் உலகநாதன் வரவேற்றார். குழு உறுப்பினர் மருது ராஜா மகளிர் தின சிறப்பு பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் செல்வகுமாரி, ஷீலா செல்வராணி, இந்திய ஜனநாயக மாதர் சங்க சரஸ்வதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சாந்தாரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.