நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை விவேகானந்த கல்லுாரியில் அகத்தர உறுதி மையம் சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்வு செயற்கை நுண்ணறிவு கருவிகளை கற்றல், கற்பித்தல், மதிப்பீட்டில் பயன்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை இணைப்பேராசிரியர் முத்துபாண்டி, செயலாளர் சுவாமி வேதானந்தா, சுவாமி அத்யாத்மானந்தா பங்கேற்றனர். உதவிப் பேராசிரியர் முத்து பாண்டி நன்றி கூறினார்.

