ADDED : மார் 30, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தேசிய தர மதிப்பீட்டு குழு சார்பில் ஓ.பி.இ., ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் நவீன மதிப்பீடு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிலரங்கம் நடந்தது.
கல்லுாரிச் செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். பேராசிரியர் லட்சுமி கிருத்திகா வரவேற்றார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் பேசினார். பயிற்சியாளர்கள் முபீன் சுல்தானா, சோபனா பயிற்சி அளித்தனர். பேராசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
