ADDED : டிச 25, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே புத்துார் வி.ஐ.பி., நகரைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் 45. ஆடுகள் வளர்த்து வரும் இவர், வழக்கம்போல நேற்று மாலை 4:00 மணிக்கு புத்துார் கண்மாயில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.
கண்மாய் பகுதியில் மின்ஒயர் அறுந்து கிடப்பதை அறியாமல் அவ்வழியாகச் சென்ற 3 ஆடுகள் மின்சாரம் தாக்கி பலியாகின.

