sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிவனின் மறுஅவதாரம் காஞ்சி மஹா பெரியவர்: எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு

/

சிவனின் மறுஅவதாரம் காஞ்சி மஹா பெரியவர்: எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு

சிவனின் மறுஅவதாரம் காஞ்சி மஹா பெரியவர்: எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு

சிவனின் மறுஅவதாரம் காஞ்சி மஹா பெரியவர்: எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு


ADDED : பிப் 06, 2024 07:29 AM

Google News

ADDED : பிப் 06, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''சிவபெருமானின் மறு அவதாரம் காஞ்சி மஹா பெரியவர்,'' என, மதுரையில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பின் சார்பில் நடந்த காஞ்சி மகா பெரியவர் அனுஷ ஆராதனை விழாவில் 'ஸ்ரீ மஹா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: உலகில் பிறந்த நமக்கு பிறந்த நாள் தேதி தெரியும். இறப்பு தேதி தெரியாது. மனித வாழ்க்கை பாவம் புண்ணியத்திற்குட்பட்டது. இரண்டும் கலந்த வாழ்க்கை நம் வாழ்க்கை. சன்னியாசிகள் உடம்பை கட்டுப்படுத்துகிறவர்கள். அதனால் உடல் அவர்கள் சொன்னபடி கேட்கும். மஹா பெரியவர் 100 ஆண்டுகள் பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தது எந்த திதியில் பிறந்தாரோ அதே நட்சத்திரம், திதியில் முக்தியும் அடைந்தவர். 87 ஆண்டுகள் துாய சந்நியாச வாழ்க்கை வாழ்ந்தவர்.

ஹிந்து மதத்தில் வழிபாடு செய்வதில் ஐந்து மார்க்கம் இருந்தாலும் கடைசியில் நாம் நிற்பது ஆதிமூலத்தில் தான். மஹா பெரியவர் ஆதிமூலத்தின் சிவபெருமானின் மறு அவதாரம் என்றால் மிகை இல்லை. காவி உடுத்திய சந்நியாசி எந்த ஊருக்கு வந்தாலும் நாம் போய் தரிசனம் செய்ய வேண்டும். கோபுர தரிசனம் மட்டுமல்ல குரு தரிசனமும் கோடி புண்ணியம் தரும். சன்னியாசிகளின் கையில் உள்ள தண்டத்தை வைத்து அவர்கள் தத்துவத்தை தெரியலாம்.

மனிதன் மட்டுமே பற்று பாசம், வாழ்க்கையில் மேடு பள்ளம் போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தவன்.

ஒவ்வொரு நாளும் நாம் கடவுள் சிந்தனைவுடன் வாழ வேண்டும். மனித வாழ்க்கை கடவுள் கொடுத்தது. அதை புரிந்து கடவுளை அடைவதற்காக தான். நம் மதத்தில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு மஹா பெரியவர் போல பதில் சொன்னவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார். ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்தார்.






      Dinamalar
      Follow us