ADDED : ஆக 01, 2026 03:07 AM

அ நிறம் | அளவு
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உசிலம்பட்டி குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் ஆடவர், மகளிர் பிரிவில் பங்கேற்ற கருமாத்துார் புனித கிளாரெட் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். 33 மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர். 32 பேர் இரண்டாம் பரிசு, 13 பேர் மூன்றாம் பரிசு பெற்றனர்.
14 வயது ஆடவர் பிரிவில் சத்ரஜித், மகளிர் பிரிவில் மோகனா, 17 வயது மகளிர் பிரிவில் சுதர்ஷினி, மோபிக்ஷா ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர். தாளாளர் செல்வமணி, தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் பிரசாத், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேக்கப் தேவானந்த், சுபாஷ் அரவிந்த் பாராட்டினர்.
