நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: தோப்பூர் புதுப்பட்டி பகுதியில் பட்டா வழங்ககோரி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை பார்வையற்றோர் முற்றுகையிட்டனர். அவர்களை தாசில்தார் கவிதா சமரசம் செய்தார்.
பார்வையற்றோர் நலச்சங்க தலைவர் குமார் கூறுகையில், 'இப்பகுதியில் 75 பார்வையற்றோருக்கு வீட்டுமனை பட்டா வழங்ககோரி 4 ஆண்டு களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தோம். அதில் 53 பேருக்கு மட்டுமே வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அனைவருக்கும் பட்டா வழங்கக்கோரி முற்றுகையிட்டோம்' என்றார்.

