நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :   பள்ளிக் கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான சிலம்பப் போட்டி மதுரையில் நடந்தது.
இதில் கருமாத்துார் புனித கிளாரெட் மேல்நிலைப் பள்ளி மாணவி தர்ஷினி 14 வயது பிரிவிலும், லத்திகா 19 வயது பிரிவிலும் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தலைமையாசிரியர் சூசை மாணிக்கம், பொருளாளர் செல்வமணி, உதவித் தலைமையாசிரியர் அருள் ஜோசப், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேக்கப் தேவானந்த், அரவிந்த், கதிர்வேல் பாண்டியன் பாராட்டினர்.

