ADDED : நவ 24, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் பி.காம்., (சி,ஏ) துவங்கி 25வது ஆண்டை கொண்டாடும் வகையில் 'சில்வர் ஸ்பார்க் 25' விழா நடந்தது.
செயலாளர் இக்னேஷியஸ் மேரி தலைமை வகித்தார். துறைத் தலைவர் சகுந்தலா வரவேற்றார். முதல்வர் பாத்திமா மேரி, சிறப்பு அழைப்பாளர்கள் எம்.எஸ்.மீனாட்சி, அரசம்மாள் துவக்கி வைத்தனர். முன்னாள் மாணவிகள் சிலரின் உரையை பேராசிரியர்கள் சுசித்ரா, சுபப்ரியா, பிரியா வழங்கினர். முன்னாள் முதல்வர்கள் செலின் சகாயமேரி, ஜோஸ்பின் நிர்மலாமேரி, துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

