ADDED : ஆக 25, 2026 08:50 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஆக.26–
மதுரைக்கல்லூரி இயற்பியல் துறையில் உங்களுக்குள் இருக்கும் அசாதாரண திறனை வெளிக்கொணருங்கள் என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை நடந்தது.
துறைத் தலைவர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். முதல்வர் சேவியர் வாழ்த்தி பேசினார். இயற்பியல் மாணவர்கள் தம்மிடம் இருக்கும் திறமையை வெளிக்கொணரும் வழிகள், தொழில் முனைவோராக உள்ள வாய்ப்புகள் குறித்து கப்பலூர் சிப்காட்டில் உள்ள சன் ரிக்லைமரி தலைவர் ஸ்ரீதர் ராமசாமி படங்கள் மூலம் விளக்கினார். பேராசிரியர் விவேகானந்தன் நன்றி கூறினார். பேராசிரியர்கள் விவேகானந்தன், ஈஸ்வரகோமதி ஒருங்கிணைத்தனர். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
