sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிறுதானிய இயந்திரம் மானியத்தில் பெறலாம்

/

சிறுதானிய இயந்திரம் மானியத்தில் பெறலாம்

சிறுதானிய இயந்திரம் மானியத்தில் பெறலாம்

சிறுதானிய இயந்திரம் மானியத்தில் பெறலாம்


ADDED : ஜூலை 23, 2025 05:41 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழகத்தில் சிறுதானிய இயக்கம் 2023 முதல் செயல்படுத்தப்படுகிறது. இதில் சிறுதானியங்களை முதன்மைப்படுத்தும் இயந்திரங்கள் வாங்க வங்கிகள் மூலம் ரூ.18.75 லட்சம் பின்னேற்பு மானியத்துடன் ரூ.25 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதன்மூலம் இளைஞர்கள், வேளாண் தொழில் முனைவோர் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தில் தானியங்கள், விதைகளில் கற்களை அகற்றுதல், உமிநீக்குதல், தானியம் பிரித்தல், பேக்கிங், தோல் உரிக்கும், பாலீஷ் செய்தல், சீல் வைக்கும், எடைபோடுதல் என இயந்திரங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

கலெக்டர் கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்குப் பின் கடன் விடுவிக்கப்படுகிறது. நாவினிப்பட்டி விக்னேஷ்வரன் கூறுகையில், ''எம்.பி.ஏ., படித்து வெளிநாட்டில் பணியாற்றினேன். கொரோனா காலத்தில் தாய்நாடு திரும்பி சொந்த தொழில் துவங்கினேன். கலெக்டரின் குழு ஆய்வு செய்து கடன் கிடைக்க உதவினர். தற்போது 4 பேர் என்னிடம் பணிபுரிகின்றனர். மாதம் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கிறது' என்றார்.






      Dinamalar
      Follow us