ADDED : மார் 11, 2026 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சுயநிதிப் பிரிவு காம்கேப்ஸ் சங்கம் சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் செயற்கை நுண்ணறிவு குறியீட்டு முறை என்ற தலைப்பில் மென் திறன் மேம்பாட்டு முகாம் நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி சிந்து வரவேற்றார். மாணவி சுஜிதாபாலா அறிமுக உரையாற்றினார்.
கல்லுாரி முன்னாள் மாணவர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிர்வாகி தினேஷ் குமார் பேசினார். மாணவர் நவநீத கிருஷ்ணன் நன்றி கூறினார். வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் நாகசுவாதி, உதவி பேராசிரியர்கள் ராஜாமணி, மஞ்சுளா, ஐஸ்வர்யலக்ஷ்மி ஒருங்கிணைத்தனர்.

