ADDED : ஜூலை 29, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: மேலமாத்துார் ஊராட்சி காமாட்சிபுரத்தில் ஊராட்சி அலுவலகத்திற்கு 2022ல் கண்மாய் கரை பகுதியில் ரூ22.66 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் புதிய ஊராட்சி கட்டடத்தை திறந்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

