ADDED : பிப் 12, 2026 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே வடகாடுபட்டியில் பெருமாள்கோயில் தெருவில் போர்வெல் மோட்டார் பழுதால் குடிநீர் தொட்டி செயல்படாமல் இருந்தது.
தொட்டியில் பல இடங்களில் ஓட்டை விழுந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்திருந்தது. இதனால் அப்பகுதியினர் மிகுந்த சிரமமடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைத்தனர்.

