ADDED : ஏப் 13, 2026 02:46 AM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டியில் சிதிலமடைந்த துணை சுகாதார நிலையத்தில் 5 கிராம மக்கள் உயிர் பயத்துடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஒப்பந்ததாரர் பெயர் அளவிற்கு மராமத்து பார்ப்பதாக புகார் வரவே வட்டார மருத்துவ அலுவலர் சண்முக பெருமாளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் மராமத்து பார்ப்பதற்கான பணம் வழங்காமல் நிறுத்தப்பட்டது.
அதைதொடர்ந்து ஒப்பந்ததாரர் புதிதாக செப்டி டேங்க் அமைத்ததோடு மீண்டும் மராமத்து பார்த்தார். அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
