/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டவருக்கு சிறப்பு பஸ்
/
ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டவருக்கு சிறப்பு பஸ்
ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டவருக்கு சிறப்பு பஸ்
ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டவருக்கு சிறப்பு பஸ்
ADDED : ஜன 12, 2025 04:35 AM
மதுரை :   மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் ஜன. 15, 16ல் வெளிநாட்டு பயணிகள் ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல்விழாவை காண  சுற்றுலா அலுவலகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது:
ஜன.15 அலங்காநல்லுார்கீழக்கரையில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏழு தழுவுதல் அரங்கத்தில்உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக பொங்கல் விழா நடத்தப்படுகிறது.
வெளிநாட்டு பயணிகளை சுற்றுலா அலுவலகத்தில் இருந்து காலை 8:00 மணிக்கு சிறப்பு பஸ்கள் மூலம் அரங்கத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி ஊர்வலம் செல்லலாம். தொடர்ந்து பரதம், பாரம்பரிய விளையாட்டுப் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

