ADDED : டிச 24, 2025 06:40 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமையில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் நிர்வாகக்குழு உறுப்பினர் மயில்வாகனன் ஆய்வறிஞர் சோமசுந்தரி பங்கேற்றனர்.
ஜெர்மனியின் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் சுபாஷினி, ஐரோப்பிய தமிழ் ஆவணங்களை உலகமயமாக்கலின் தேவை எனும் தலைப்பில் பேசுகையில், 'ஜனோபகாரி, பினாங்கு விஜயகேதனன், சிங்கை நேசன் உள்ளிட்ட இதழ்கள் ஆவணங்களாக பிரிட்டிஷ் நுாலகத்தில் உள்ளன. சீகன்பால்க் கையெழுத்து ஆவணம் அறிக்கையாக கிடைக்கிறது' என்றார். ஆய்வுவளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.
