ADDED : அக் 14, 2025 04:10 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக் கூடாது, இம் மலையை திருப்பரங்குன்றம் மலை என்றுதான் தொடர்ந்து அழைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
அதற்காக ஹிந்து வழக்கறிஞர் முன்னணி மாநில துணைத்தலைவர் பரமசிவம் தலைமையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நிர்வாகிகள் சுப்பையா, விஜயராஜன், பெருமாள்சாமி, ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில துணைத்தலைவர் சுந்தர வடிவேலு, பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ரமேஷ் குமார், நாகராஜன், கேசவராஜன், வெங்கடேசன், கணேஷ் குமார் பங்கேற்றனர்.
