ADDED : அக் 17, 2025 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் 12வது எஸ்.ஜி.கே.எஸ். மாநில அளவிலான கராத்தே போட்டிகள் பாத்திமா கல்லுாரியில் நடந்தன. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மதுரை அணி வென்றது. தலைமை நடுவராக சோபுக்காய் கோஜூரியோ கராத்தே பள்ளி இந்திய தலைமைப் பயிற்சியாளர் சுரேஷ்குமார் செயல்பட்டார். மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில், நிர்வாகிகள் கார்த்திக், அங்குவேல், பால காமராஜன், முத்துராஜா, தணிகைவேல் பங்கேற்றனர்.