ADDED : அக் 27, 2024 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான கல்லுாரி மாணவர்களுக்கு இடையிலான நீச்சல் போட்டி வேளச்சேரியில் நடந்தது.
இதில் லேடிடோக் கல்லுாரி மாணவி சேபிஷா 50 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றார். ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, நீச்சல் சங்க நிர்வாகிகள் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், கண்ணன், உடற்கல்வி இயக்குநர் சாந்தமீனா, பயிற்சியாளர் விஜயகுமார் பாராட்டினர்.