நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: தமிழகத்தில் ரயில்வே, பேங்க்குகள் தபால் துறை உள்ளிட்ட மத்திய அரசின் பணிகளில் வடநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக அளவில் பணி ஒதுக்கீடு செய்யப்படுவதை கண்டித்து அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கிரீஸ் பாக்கியம் தலைமை வகித்தார்.
தாலுகா செயலாளர் சுபாஷ், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் முத்துவேல், துணைச் செயலாளர் சந்தானம், மாவட்டக் குழு உறுப்பினர் சுப்பிரமணி உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

