ADDED : டிச 13, 2025 06:31 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை நகரில் இரவில் வாகன முகப்பு விளக்குகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.
போக்குவரத்து துணைகமிஷனர் வனிதா தலைமையில் திலகர்திடல் இன்ஸ்பெக்டர் தங்கமணி முன்னிலையில் சிம்மக்கல் பகுதியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை பாராட்டியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
