ADDED : பிப் 27, 2024 07:47 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை வண்டியூர் தீர்த்தக்காடு, மாரியம்மன்நகர், பாம்பாட்டிநகர், சங்குநகர், காளியம்மன் கோயில் தெரு பகுதி மக்கள் தீர்த்தக்காடு பகுதி அரசு புறம்போக்கு நிலத்தில் பலஆண்டுகளாக குடியிருந்து வந்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி மாவட்ட நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தியது. இதையடுத்து அப்பகுதியினர் அதே இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி சுடுகாட்டு பகுதியில் குடியிருப்பு போராட்டம் நடத்தினர்.இதில் ஈடுபட்டவர்களிடம் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் செலின்கலைச் செல்வி பேச்சு வார்த்தை நடத்திய பின் போராட்டம் கைவிடப்பட்டது.
