ADDED : மார் 08, 2026 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே கல்லணை, டி.புதுார், அச்சங்குளம், லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட கல் குவாரிகள், கிரசர்கள் இயங்கி வருகின்றன. குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதித்துள்ளது. வெடி சத்தம், துாசியால் மக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே குவாரிகளை மூடக்கோரி 4 மாதங்களாக இப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று திருமங்கலம் அருகே ராயப்பாளையத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முறையிட போவதாக கிராம மக்கள் போஸ்டர்கள் ஒட்டினர். இதனால் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

