ADDED : ஜன 27, 2026 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டியில் வருவாய்த்துறையினர், நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். தாசில்தார் பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் பரமசிவம், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு, வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
* உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன்பு கொட்டம்பட்டி வலைச்சேரி கிராமம் சமூக ஆர்வலர் சரவணன், வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் ஜனநாயக முறைப்படி பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு பிரசாரம் மே ற்கொண்டார்.

