நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் செம்பூரணி பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் மகன் அஸ்வின் 15; அருப்புக்கோட்டை அருகே தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்தார். அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக மதுரை வந்த அஸ்வின், நண்பர்களுடன் வள்ளானந்தபுரம் ஊரணியில் குளிக்கச் சென்றார்.
தண்ணீர் நடுவே ஆழத்தில் சென்றபோது அஸ்வின் மூழ்கி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

