நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்:மதுரை முத்துப்பட்டி செந்தில்குமார் மகன் பாலசந்துரு 17, பசுமலை தனியார் கல்லூரியில் முதலாண்டு படித்தார்.
பாலசந்துரு நேற்று மாலை நண்பர்களுடன் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்றார்.
ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாத அவர் நீருக்குள் மூழ்கினார். திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் சரவண பொய்கையில் மூழ்கிய பால சந்துருவின் உடலை மீட்டனர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

