
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : துாத்துக்குடி மாவட்டம் கொட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 45. சென்னையில் வசிக்கிறார். ஊர் திருவிழாவிற்காக ஜீப்பில் குடும்பத்துடன் புறப்பட்டார். சென்னை ராமஜெயம் 40, ஓட்டினார்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கருங்காலக்குடி பகுதியில் சென்னையில் இருந்து விருதுநகருக்கு பருப்பு ஏற்றிச்சென்ற லாரியின் பின்னால் ஜீப் மோதியதில் முத்துக்குமார் மகன் பரத் பிரசன்னா 18, (கல்லுாரி மாணவர்) இறந்தார். சரஸ்வதி 38, உறவினர்கள் 4 பேர் காயமுற்றனர்.