நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் அரசு கல்லுாரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
கிளை செயலாளர் ராஷித், மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தனர். மாநில துணைதலைவர் விக்ரம், மாநில குழு உறுப்பினர் சேது பாண்டி, தாலுகா செயலாளர் நொண்டி சாமி முன்னிலை வகித்தனர். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர். டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

