ADDED : ஜன 22, 2026 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் காவியதர்ஷனி, மகிஷா,ரேஷ்மா, மல்லிகா, பார்கவி, சவுமியா,ஸ்ரீமதி, வீரமணி ஆகியோர் வாடிப்பட்டி ஒன்றியத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
புதுார் கிராமத்தில் விவசாயிகள், பொதுமக்களுக்கு பச்சைக் கீரைகள், அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறினர். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, அலர்ஜியை குறைத்து கண்களை பாதுகாத்து செரிமானத்திற்கு உதவுவது, நீரிழிவு மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் கீரை வகைகள் குறித்தும், இவை வளர்ந்த பயிர்களை விட அதிக சத்துக்களை கொண்டுள்ளது எனவும் படங்கள் மூலம் விளக்கினர்.

