ADDED : டிச 11, 2024 04:36 AM
மதுரை : மதுரை பாண்டுகுடி ஸ்ரீ லட்சுமி நாராயணா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் எண் கணிதத்தில் உலக சாதனை செய்தனர்.
250 பேருக்கு எண் கணிதத்தில் 5, 8 இலக்கங்கள் கொண்ட கணிதத்தை 15 நிமிடத்தில் பூர்த்தி செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.1 - 5ம் வகுப்பு வரை, 6 -11ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வினாக்கள் வழங்கப்பட்டன. 60க்கும் மேற்பட்டவர்கள் 8 நிமிடம் முதல் 10 நிமிடத்திற்குள் எண் கணிதத்தை பூர்த்தி செய்தனர். 5ம் வகுப்பை சேர்ந்தவர்கள் 5 நிமிடத்தில் கொடுக்கப்பட்ட எண் கணித இலக்கங்களை பூர்த்தி செய்து சாதனை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை கலெக்டர் திருமலை, கிராண்ட் யுனிவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் நிறுவனர் ஷேக் முகமது, தலைமை செய்தி ஆசிரியர் ஜாகிர் உசேன், பள்ளி இயக்குநர் இலக்கியா கண்ணன், தலைமை ஆசிரியர் ரெஹனா பேகம், வேத கணித பயிற்சியாளர் ராதிகா, இன்னோவிக் எஜூகேஷன் நந்தினி, ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

