/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
/
40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
ADDED : பிப் 22, 2026 06:23 AM

திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 1981 --1985ல் படித்த மாணவர்கள் 45 ஆண்டுகளுக்குப்பின்பு கல்லுாரியில் குடும்பத்துடன் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இதற்கான நிகழ்ச்சியில் கல்லுாரி ஆட்சிக் குழு உறுப்பினர் உமா கண்ணன் தலைமை வகித்து டிஜிட்டல் வடிவ விழா மலரை வெளியிட்டு பேசினார். முதல்வர் (பொறுப்பு) காமராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்வர் அபய்குமார், முன்னாள் மாணவர்கள் சங்க தலைமை தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் மரியலுாயிஸ் காணொலியில் பேசினார். கல்லுாரியில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்காக முன்னாள் மாணவர்கள் ரூ. 5 லட்சம் வழங்கினர்.

