நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மேலுார் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம்,ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக மையத்தை வேளாண்மை உதவி இயக்குநர் ஆனந்தன் ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது:
பயிர்களை தாக்கும்நோய், பூச்சிகளின் சேதத்தை கட்டுப்படுத்த சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, மெட்டாரைசியம், டி.கைலோனிஸ், என்.பி. வைரஸ் போன்றவை இந்த ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. இவற்றை ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துடன் கலந்து பயன்படுத்தக் கூடாது. இந்த உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்தி நோய் மற்றும் பயிரைத் தாக்கும் பூச்சிகளிலிருந்து பாதுகாக்கலாம் என்றார். வேளாண்மை அலுவலர் ஜெயந்தி உடனிருந்தார்.