ADDED : நவ 12, 2024 05:16 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சி தாதப்பநாயக்கன்பட்டி சூர்யா நகர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தெருக்களின் சாலைகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி, நடந்து செல்லக் கூட ஏற்றதாக இல்லை. சிறு மழைக்கே மழைநீர் தேங்கி விடுகிறது. டூவீலரில் செல்வோர் வழுக்கி விழுகின்றனர். பெற்றோர் மாணவர்களை நடக்கவிடாமல் துாக்கி கொண்டு ஆபத்தான முறையில் சகதியை கடக்கின்றனர்.
சிலர் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர். பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
