sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நுாபுர கங்கையில் நீராடிய  சுந்தரராஜ பெருமாள்

/

நுாபுர கங்கையில் நீராடிய  சுந்தரராஜ பெருமாள்

நுாபுர கங்கையில் நீராடிய  சுந்தரராஜ பெருமாள்

நுாபுர கங்கையில் நீராடிய  சுந்தரராஜ பெருமாள்


ADDED : நவ 03, 2025 04:02 AM

Google News

ADDED : நவ 03, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை தீர்த்தத்தில் சுந்தரராஜ பெருமாள் நேற்று புனித நீராடினார்.

ஐப்பசியில் 3 நாட்கள் நடைபெறும் தைலக்காப்புத் திருவிழா, அக். 31ல் துவங்கியது. கோயில் வளாகத்தில் உள்ள மேட்டுக் கிருஷ்ணன் சன்னதியில் முதல் நாள் பரமபதநாதன் அலங்காரத்திலும், 2ம் நாள் சேஷ வாகனத்திலும் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மூன்றாம் நாளான நேற்று காலை 6:45 மணிக்கு மேல், சுந்தரராஜ பெருமாள் பூப்பல்லக்கில் சகல பரிவாரங்களுடன் மலைப்பாதை வழியாக அழகர்மலைக்கு புறப்பட்டார். வழியில் உள்ள அனுமார், கருட தீர்த்த இடங்களில் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் ராக்காயி அம்மன் கோயிலில் உள்ள மாதவி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.

அங்கு காலை 10:35 மணிக்கு மேல் பெருமாளுக்கு தைலம் சாத்தப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் நுாபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராட வைத்து திருமஞ்சனம் நடந்தது. விசேஷஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையில் இருப்பிடம் சேர்ந்தார்.

அழகர்மலை மீதுள்ள நுாபுர கங்கையில் ஆண்டுக்கு ஒருமுறை சுவாமி நீராடுவதைக் காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us