sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருப்பரங்குன்றத்தில் 'சூர சம்ஹார லீலை'

/

திருப்பரங்குன்றத்தில் 'சூர சம்ஹார லீலை'

திருப்பரங்குன்றத்தில் 'சூர சம்ஹார லீலை'

திருப்பரங்குன்றத்தில் 'சூர சம்ஹார லீலை'


ADDED : மார் 17, 2025 05:21 AM

Google News

ADDED : மார் 17, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை (மார்ச் 18) நடக்கிறது. அதற்கு முன் நிகழ்ச்சியாக இன்று இரவு 7:45 மணிக்கு கோயில் ஆறுகால் பீடத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

சூரசம்ஹார லீலை


நேற்று மாலை வீதிஉலா நிகழ்ச்சியில் யானை, ஆடு, சிங்கம் உள்பட பல்வேறு தலைகளுடன் மாறி மாறி சூரபத்மன் முன்னே செல்ல குதிரை வாகனத்தில் வீரபாகு தேவரும், திருவிழா நம்பியார் சிவாச்சாரியார் வாள் ஏந்திச் சென்றனர்.

தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வேலுடன் எட்டு திக்குகளிலும் விரட்டிச் சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சி நடந்தது. சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார புராண கதையை பக்தர்களுக்கு சிவாச்சாரியார் கூறினார். தீபாராதனை முடிந்து சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us