வாடிப்பட்டி வி.எஸ்.நகரில் கண்காணிப்பு கேமரா அமைப்பு
வாடிப்பட்டி வி.எஸ்.நகரில் கண்காணிப்பு கேமரா அமைப்பு
ADDED : ஜன 04, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சி வி.எஸ்., நகரில் வி.எஸ்., நகர், கணபதிநகர் குடியிருப்போர் நலச்சங் கம் சார்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா துவக்க விழா நடந்தது.
வி.எஸ்.நகர் ஊக்குவிப்பாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் முன்னிலை வகித்தார்.
சங்கத் தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். சமயநல்லுார் டி.எஸ்.பி., ஆனந்தராஜ் துவக்கி வைத்தார். முன்னாள் துணைச் சேர்மன் சோனை, இன்ஸ்பெக்டர் வளர்மதி, செயல் அலுவலர் ஜெயலட்சுமி, கவுன்சிலர் மீனா ஆறுமுக கடவுள், சங்கச் செயலாளர் சுகுமார், பொருளாளர் செல்வம், துணைத் தலைவர் வெங்கட் ராமன், துணைச் செயலாளர் பரமேஸ்வரன் பங்கேற்றனர். ஆசிரியர் ராமலிங்கம் தொகுத்து வழங்கினார்.ஓய்வு ராணுவ வீரர் ராஜ் தீபக் நன்றி கூறினார்.
