ADDED : ஜூலை 12, 2025 04:22 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரையில் தனியார் பள்ளிகளின் டி.இ.ஓ.,வாக கார்மேகம் பொறுப்பேற்றார்.
பாரப்பத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றிய இவர், டி.இ.ஓ.,வாக பதவி உயர்வு பெற்றார். இதுபோல் பெரிய ஆலங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அமல்ராஜ், சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளராக (உயர்நிலை) பொறுப்பேற்றார். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் (மேல்நிலை) பணியிடம் காலியாக உள்ளது. கலந்தாய்விலும் நிரப்பப்படவில்லை.
