ADDED : மார் 07, 2026 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்றார். எழுத்தாளர் தமிழ் மணவாளன், 'சங்க இலக்கியமும் சமகால இலக்கியமும்' என்ற தலைப்பில் பேசுகையில், 'தமிழ் மரபின் அடிப்படையை அகம், புறம் என சங்க கால புலவர்கள் வகுத்தனர்.
காதல், உணவு, உடை, அணிகலன், விழா குறித்து அக இலக்கியம் பேசுகிறது. சங்க இலக்கியம், சம கால இலக்கியம் இரண்டுமே அறத்தை போதிக்கின்றன' என்றார். சேர்மத்தாய் வாசன் கல்லுாரி மாணவர்கள், பழங்காநத்தம் ஆர்.சி., உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஆய்வறிஞர் சோம சுந்தரி நன்றி கூறினார்.

