/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆசிரியர் சங்க கூட்டமைப்பு மாநாடு
/
ஆசிரியர் சங்க கூட்டமைப்பு மாநாடு
ADDED : பிப் 23, 2026 05:22 AM
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் அனைத்திந்திய பல்கலை, கல்லுாரி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.யு.சி.டி.ஓ.,) சார்பில் 3 நாள் மாநாடு, சங்கத் தலைவர் நாகராஜன் தலைமையில் நேற்று தொடங்கியது. மூட்டா பொதுச் செயலாளர் செந்தாமரைக்கண்ணன் வரவேற்றார்.
துணை மேயர் நாகராஜன் பேசுகையில், ''தனியார்மயமாக்கலை தடுத்து, கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அரசே இலவசமாக வழங்க வேண்டும்.
தரமான கல்வி பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. அதை வழங்குவது அரசின் கடமை. அதிலிருந்து தவறும் பட்சத்தில் அமைப்புகள் போராட வேண்டும்'' என்றார்.
பல்கலை ஆசிரியர்கள் சங்கம் (ஏ.யு.டி.,) பொதுச்செயலாளர் சேவியர் செல்வகுமார் நன்றி கூறினார். ஏ.ஐ.எப்.யு.சி.டி.ஓ., பொதுச் செயலாளர் அருண்குமார், முன்னாள் தேசிய செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் துணைத் தலைவர் விவேகானந்தன், தமிழக கல்லுாரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜே.ஏ.சி.,) செயலாளர் சுரேஷ், உலக ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் அமிய குமார் மொஹன்டி, தென்னாப்பிரிக்க ஜனநாயக ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் முக்வெனா மலுலெகி உட்பட பலர் பங்கேற்றனர்.

