ADDED : மார் 18, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று 350 பேருக்கு மேல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
மார்ச் 23 கரகம் எடுத்தல், மார்ச் 24 பால்குடம், மாவிளக்கு, பூத்தட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 25 பொங்கல் வைப்பது மற்றும் முளைப்பாரி எடுப்பது நடைபெறும். மார்ச் 26 பூசத்தாய் ஊருணியில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.

