நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தும்பைபட்டி வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோயிலில் நேற்று கொடியேற்றப்பட்டது. பக்தர்கள் 12 நாட்கள் காப்பு கட்டி விரதமிருப்பர்.
ஏப். 1 து.அம்பலகாரன்பட்டியில் இருந்து வீரகாளியம்மன் மற்றும் மந்தை கருப்பண சுவாமி சிலைகள் பெரிய மந்தைக்கும், ஏப். 3 பெரிய மந்தையில்ருந்து கோயிலுக்கு சுவாமி சிலைகள் கொண்டு செல்லப்படும். ஏப். 4 நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்ற பக்தர்கள் சுவாமி சிலைகள் மற்றும் பதுமைகளை து.அம்பலகாரன்பட்டியில் இருந்து கோயிலுக்கு கொண்டு செல்வர். பிறகு பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும், அங்கபிரதட்சணம் செய்தும், கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறும்.