நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று (மார்ச் 8) இரவு 8:30 மணிக்கு மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் இருந்து சிவாலய நடை பயணம் துவங்குகிறது.
இப்பயணம் தென் திரு ஆலவாய் திருக்கோயில், இம்மையிலும் நன்மை தருவார் கோயில், புட்டுத்தோப்பு சிவன் கோயில், திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் காசி விஸ்வநாதர் கோயில், ஆதி சொக்கநாதர் திருக்கோயில்களில் தரிசனம் செய்து மீனாட்சி அம்மன் கோவிலில் நிறைவு பெறும் என ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. பங்குபெறுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 98421 09944.

