ADDED : பிப் 16, 2024 05:47 AM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு வரிகள் சட்டத்தின் கீழ் வாட் வரி நிலுவைக்கான சமாதான் திட்டம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் கூறுகையில், 2023 அக்.16 முதல் நேற்று வரை (பிப்.15) திட்டம் செயல்படுத்தப்பட்டது. 9594 வணிகர்கள் ரூ. 170 கோடி வரை வரி நிலுவை செலுத்தியுள்ளனர். இத்திட்டத்தை ஜூன் வரை நீட்டிக்க வலியுறுத்திய நிலையில் மார்ச் 31 வரை நீட்டித்து வணிகவரித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுக்கு நன்றி'' என்றார்.
