sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாலம் உயர்ந்து போச்சு: ரோடு இறங்கி போச்சு

/

பாலம் உயர்ந்து போச்சு: ரோடு இறங்கி போச்சு

பாலம் உயர்ந்து போச்சு: ரோடு இறங்கி போச்சு

பாலம் உயர்ந்து போச்சு: ரோடு இறங்கி போச்சு


ADDED : ஆக 11, 2025 04:28 AM

Google News

ADDED : ஆக 11, 2025 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகம் தெற்கு ரத வீதியில் சாக்கடை கால்வாய் பாலம் உயர்ந்து, ரோடு தாழ்ந்துள்ளதால் தண்ணீர் தேங்கி அப்பகுதியினர் சிரமமடைகின்றனர். அப்பகுதி முருகன் கூறியதாவது: இங்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் பாலம் கட்டப்பட்டது. ரோடு மட்டத்தில் இருந்து உயர்த்தி கட்டப்பட்டது. கட்டி முடித்து ரோட்டை பாலத்தின் மட்டத்திற்கு உயர்த்தாமல் விட்டுவிட்டனர். இதனால் அப்பகுதி மேடு பள்ளமாகவும் சேதம் அடைந்த நிலையிலும் உள்ளது.

இதனால் வாகனங்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இவ்வழியே செல்லும் பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் தொற்று அபாயமும், சுகாதார சீர்கேடும் உள்ளது. தேங்கிய நீர் வடிய வழியில்லை. இதனால் வெயில் அடித்து நீர் ஆவியாகும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us